காட்டுநாயக்கன் குடும்பம் சிறுவனப் பொருட்களை காடுகளிலிருந்தும் அருகிலுள்ள சமவெளியிலிருந்தும் சேகரித்து வந்துள்ளனர். காடுகளில் மலை துடைப்பங்கள், ஹெக்கே, பென்னியா போன்ற கிழங்குகளையும்  மற்ற பொருட்களை சதாவரி, நானாரி ஆகியவற்றையும் சேகரித்துள்ளனர். இவர்கள் பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுவதிலும் தேன் எடுப்பதிலும் வல்லுநர்கள். காட்டுநாயக்கன் பெண்களும் குழந்தைகளும் எப்போதும் மீன், நண்டுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில காட்டுநாயக்கன் நெல், காபி, தேயிலை, சின்கோனா, மிளகு, பூண்டு, இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றை பயிரிடுகின்றனர். முட்டைக்கோஸ், முள்ளங்கி, டர்னிப் போன்ற காய்கறிகளையும் பயிரிடுகின்றனர்.